குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!
#SriLanka
#Death
#Covid 19
Yuga
3 years ago

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் மரணமானதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ள குறித்த பெண்ணுக்கு, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹப்புத்தளை – தொட்டலாகலை பகுதியில் கடந்த 29ஆம் திகதி தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய 14 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியிருந்தனர்.
அவர்களில் ஹப்புத்தளை – பிட்டரத்மலை பகுதியைச் சேர்ந்த 49 வயதான பெண்ணொருவரே இவ்வாறு மரணித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மரண பரிசோதனைகளின் பின்னரே உயிரிழந்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்த முடியும் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.



