3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்
Prabha Praneetha
4 years ago
இருநூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் 100 மாணவர்களை விடக் குறைவான பாடசாலைகளின் எல்லா வகுப்புகளையும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அளவுகோல்களின் கீழ் 3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல், கல்வி அமைச்சருக்கும் மாகாண சபை ஆளுநர்களுக்கு இடையில் இடம்பெற்றதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, இந்த பாடசாலைகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது தொடர்பாகவும், இந்த கலந்துரையாடலின் போது ஆளுநர்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.