தூக்கில் தொங்கிய நிலையில் இளம் ஜோடியின் சடலம் மீட்பு
#Death
#Police
Prathees
3 years ago

மீரிகமவில் உள்ள ஒரு வீட்டில் இளம் தம்பதிகளின் சடலங்கள் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் மீரிகமஇ லிந்தரவில் உள்ள ஒரு வீட்டின் அறையில் ஆண் மற்றும் பெண்ணொருவரின் சடலங்கள் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 23 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும் அதே பகுதியில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணின் கணவர் என நம்பப்படும் குறித்;த நபர், மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற பின்னர் அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த இருவரும் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு நான்கு வயது மகன் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.



