விவசாயிகளைப் பாதுகாக்க வீதிக்கு இறங்குவேன்: மழையில் நனைந்து கொண்டே கருத்து தெரிவித்த சஜித்

விவசாயிகளைப் பாதுகாக்க நிச்சயமாக வீதிக்கு இறங்குவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
விவசாய சமூகத்தின் பிரச்சினைகள் பற்றிய ஆராய லுணுகம்வெஹெர பிரதேசத்திற்குச் சென்றவேளை அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் பெய்த கனமழையில் நனைந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கருத்தை தெரிவித்தார்.
விவசாயிக்கு உருவாக்கப்பட்ட இந்த இருண்ட சூழ்நிலையை தொடர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
நிச்சயமாக விவசாயிக்கு ஆதரவாக நிற்கிறோம். நாங்கள் நூறாயிரக்கணக்கான விவசாயிகளுடன் போராடுகிறோம்.
விவசாயியை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சரியான சந்தை இல்லாதது, உரங்கள் மற்றும் விதைகளின் பற்றாக்குறை,
அறுவடை பாதுகாப்பு முறைகளில் சிக்கல்கள், பச்சைப் பயறுக்கு கம்பளிப்பூச்சி சேதம் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.



