ஆசிரியர் தினத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர் சங்கம்
#Sri Lanka Teachers
Prasu
3 years ago

ஆசிரியர் தினமான ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்ட தொடர் ஒன்றை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தடைகளை மீறி தொடர்ந்து தங்களது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றுடன் 84 நாட்களாக தங்களது ஆர்ப்பாட்டம் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



