கனடாவில் கரடி தாக்குதலுக்குள்ளாகி இருவர் காயம்

கனடாவில் கரடித் தாக்குதலுக்குள்ளாகி இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இருவரை தனித்தனியாக அதாவது மலையேறுபவர் ஒருவரையும் வேட்டைக்காரன் ஒருவரையும் கரடி தாக்கியதால் மாகாண அதிகாரிகள் அல்பேட்டாவிற்கு தெற்கு மலைப்பகுதிக்கான வழித்தடங்களை மூடியுள்ளனர்.
முதல் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் நடந்தது.
இச் சம்பவத்தை நேரில் கண்ட கல்ஹரி என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
கைவுட் கணவாய்ப்பகுதியின் தென்மேற்கு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு மனிதன் ஒரு கரடி மற்றும் இரண்டு குட்டிகளிடம் அகப்பட்டு தப்பிக்க முயற்சித்துக்கொண்டிருந்தான்.
அப்பகுதியில் மொபைல் சிக்னல் வசதி இன்மையால் வேறொரு சாதனத்தின் மூலம் அல்பைன் உலங்கு வானுார்தியை உதவிக்கு அழைத்து, பின்னர் அவர்கள் பின்புறம் உள்ள பாதையினை சுட்டிக்காட்டி அவரை அழைத்து, நிலத்தடி அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அவரது உடலில் பல எண்ணிக்கையான கரடியின் நகக்கீறலுக்குள்ளான காயங்கள் இருந்ததாக அவர் கூறினார்.
இரண்டாவது சம்பவம் இரவு 8 மணியளவில் நடந்துள்ளது, வேட்டையாடிக் கொண்டிருந்த ஒருவரை கரடி தாக்கியுள்ளது.
இந்தப் பகுதியில், கரடிகள் ஆபத்து நிறைந்த இடம் என குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



