கனேடிய பெற்றோர்களுக்கு பொலிசார் எச்சரிக்கை

#world_news
கனேடிய பெற்றோர்களுக்கு பொலிசார் எச்சரிக்கை

கனடாவின் கல்கரியில் ஒரே நாளில் நான்கு இடங்களில் சிறார்களை கடத்திச் செல்லும் முயற்சி நடந்துள்ளதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் Windsor Park, Wildwood, Forest Lawn மற்றும் Copperfield ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது. பொலிசாரின் தகவலின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறார்கள் தனித்து காணப்பட்டதாலையே மர்ம நபர்கள் அணுகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் குறிப்பிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களைச் சுற்றியுள்ள விவரங்களை தொடர்ந்து ஆய்வு செய்யும் போது, குற்றச்சாட்டுகளின் தீவிரம் மற்றும் மிகுந்த எச்சரிக்கையுடன், இந்தத் தகவல் பொதுமக்களுடன் பகிரப்படுவதாக பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி, குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், இணையத்தில் சிறார்கள் பாதுகாப்பு தொடர்பிலும் எச்சரிக்கை தேவை என தெரிவித்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட நான்கு சம்பவங்களுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ள பொலிசார், இந்த நான்கு சம்பவங்களுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே, Wildwood பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை அடையாளம் கண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எஞ்சியுள்ள சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள பொலிசார், பொதுமக்கள் இந்த விவகாரம் தொடர்பில் உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!