இலங்கையில் ஊரடங்கு தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு !
#Sri Lanka President
#Curfew
Yuga
3 years ago

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி தனக்கு ஆலோசனை வழங்கியதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய, ஒவ்வொரு துறையினரும் தமக்கான திட்டங்களை தற்போது தயாரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர், அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் விதம் குறித்த கலந்துரையாடல் இன்று (27) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



