மட்டக்களப்பில் மீனவர்களின் வலையில் சிக்கிய மோட்டார் குண்டு
#Batticaloa
Prathees
3 years ago

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகாமையில் நேற்று மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாலம் அமைந்துள்ள பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிந்த மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் இக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸார்,விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் குறித்த மோட்டார் குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் குறிப்பட்டனர்



