லொறி மோதி குடும்பஸ்தர் பரிதாபச் சாவு!
#SriLanka
#Accident
#Death
Yuga
3 years ago

அம்பாந்தோட்டை மாவட்டம், தங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலிஅத்த பிரதேசத்தில் லொறி ஒன்று பாதாசாரி ஒருவர் மீது மோதியதில், பாதாசாரதி பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.
இவ்விபத்தில், தங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயது குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் தங்கல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



