சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது

#Arrest #Police
Prathees
3 years ago
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது

பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை  அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இரத்தினபுரி மாவட்டத்தில் குட்டிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துங்கம பகுதியில் உள்ள அம்பலாந்தோட்டை அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 44 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக துங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!