மட்டக்களப்பு வாவியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!
#Batticaloa
#Death
Yuga
3 years ago

மட்டக்களப்பு ஏறாவூர் சந்திவெளி வாவியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் நேற்று முதல் காணாமல் போயிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
முரக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 60 வயதுடையான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், ஏறாவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



