50 மில்லியன் மக்களை உயிரிழக்க செய்யும் போதைப்பொருள் சிக்கியது.. பெண் உட்பட இருவர் கைது..!!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆபத்து நிறைந்த போதைபொருள் 20 கிலோ கண்டறியப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட இருவர் கைதாகியுள்ளனர்.
கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டிலிருந்து இந்த போதை மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த போதை பொருளால், 50 மில்லியன் மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று காவல்துறையினர் கூறியுள்ளார்கள். மேலும் 4 கிலோ எடை கொண்ட கொக்கைன் மற்றும் 900 கிராம் அளவில் ஹெராயின் போதை மருந்தும் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில், Andres Jesus Morales (20), Christine Ponce(23) ஆகிய இருவரும் கைதாகியுள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த Carfentanil என்ற போதை மருந்து, யானைகளை அமைதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. மனிதர்கள் பயன்படுத்தக்கூடாது.
அவசர உதவி குழுவினர் இது குறித்து கூறுகையில், தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இந்த போதை மருந்தை பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். இந்த போதை மருந்துகள் அனைத்தும் மிகவும் ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார்கள்.



