நீதவானின் இல்லத்திற்கு முன் ஒழுங்கற்ற முறையில் நடந்தபொலிஸ் உத்தியோகத்தர் கைது
#Police
#Arrest
Prathees
3 years ago

பலபிட்டிய நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட காவலர் ஒருவர் நேற்று (24) இரவு குடிபோதையில் இல்லத்திற்கு முன் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதற்காக அம்பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அம்பலங்கொடை காவல்துறையில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று மாலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை மஜிஸ்திரேட் நீதவானின் அதிகாரபூர்வ இல்லத்தில் பாதுகாப்pற்காக நியமிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பலபிட்டிய மருத்துவமனை மருத்துவரிடம் ஆஜர்படுத்தப்பட்டு அவர் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
சந்தேக நபர் இன்று பலபிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



