சட்டவிதிகளை மீறிய மேலும் 418 பேர் கைது
#Arrest
#Police
Reha
3 years ago

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய மேலும் 418 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியைப் பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது 48 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 77 ஆயிரத்து 543 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.



