பிரான்ஸில் மகிழுந்து மோதியதில் 3 பேர் காயம்.

சோம்ப்ஸ்-எலிசேயில் மகிழுந்து ஒன்று திடீரென பாதசாரிகள் மீது பாய்ந்தது. இதில் மூவர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் Avenue des Champs-Élysées இல் இடம்பெற்றுள்ளது. சிறிய கறுப்பு நிற மகிழுந்து ஒன்றை செலுத்திவந்த பெண் ஒருவர் திடீரென அதிவேகமாக மகிழுந்தை செலுத்தியுள்ளார். இதன்போது மகிழுந்தின் கீழ் சிக்கிக்கொண்ட ஒருவர் பல மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேலும் பலரை மகிழுந்து இடித்து தள்ளி இறுதியாக தடம் புரண்டு மகிழுந்து நின்றது. அங்கிருந்த பலர் மகிழுந்தை தூக்கி அடியில் சிக்கிக்கொண்டவரை காப்பாற்றியுள்ளனர்.
உதவிக்குழு மிகவிரைவாக செயற்பட்டு காயமடைந்தவர்களை மீட்டது. இச்சம்பவத்தில் மொத்தமாக நால்வர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் பலத்த காயமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மகிழுந்தை செலுத்தி வந்த பெண் சாரதி கைது செய்யப்பட்டார். அவர் மிகுந்த அதிர்ச்சியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தின் போது அவர் nitrogen oxide வாயு உட்கொண்டதாகவும், இதனாலேயே கட்டுப்பாட்டை மீறி மகிழுந்தை இயக்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



