ஐநா, சுவிற்சலாந்தில் பிள்ளைகள் உரிமைகள் முறையாக கவனிக்கப்படுவதில்லையென குற்றச்சாட்டு.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சலாந்தில் பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சுவிற்சலாந்து மேலும் பல செய்ய முடியும் என சுவிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
சுவிற்சலாந்து 1997 ஆம் ஆண்டில் பிள்ளைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டை அங்கீகரித்தது. இது பாகுபாடின்றி அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பு, உயிர்வாழ்வு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான உலகளாவிய தரங்களை நிறுவியது.
இது குறித்த மறு பரீசீலனை ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐநா குழு பிள்ளைகள் உரிமைகள் பற்றிய பதிவை நேற்று ஆரம்பித்தது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு உத்தியோகபுர்வ முன்னேற்ற ஆய்வு நடைபெறுகிறது.



