பிரிட்டன் டெபிஷயரில் ஒரு வீட்டில் நான்கு உடல்கள் கண்டுபிடிப்பு!

வடகிழக்கு டெபிஷயர் பாராறுமன்ற உறுப்பனர் லீ ரௌலி அவரது சமூகத்தில் ஒரு வீட்டில் நான்கு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடரந்து அவரது சமூகம் அதிர்ச்சியும் கவலையும் அடைவதாக கூறுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7.25 மணியளவில் ஷெபில்ட் அருகே உள்ள கில்லாமர்ஷின் சாண்டோஸ் கிரசென்டில் உள்ள ஒரு வீட்டிற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
இவர்கள் இது சம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இறப்புகள் தொடர்பாக வேறு யாரையும் அவர்கள் தேடவில்லை என்றும் கூறினார்.
இறந்தவர்கள் பொதுவாக அடையாளம் காணப்படவில்லை ஆனால் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு தொடர்பா ரௌலி$, பயங்கரமானதும் மற்றும் மிகவும் சோகமானது என்று விவரித்தார். மேலும் இந்த சமுதாயத்தை மிகவும் அழகான, நெருக்கமான உறவு மற்றும் அன்பான சமூகம் என்றும் இது பல குடியிருப்பாளர்களை அதிர்ச்சியிலும் கவலைக்குள்ளும் தள்ளியிருக்குமென்பது எனக்கு தெரியும் என்றார்.
ந்த கடினமான நேரத்தில் கிராமம் ஒன்று சேரும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை என்று முடித்தார்.



