வீதியோரத்தில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தையொன்று உயிருடன் மீட்பு
#Police
Prathees
3 years ago

கிண்ணியா பிரதேச செயலகத்திற்குற்பட்ட சம்வாச்சதீவு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இன்று (19) காலை அப்பகுதி வீதியோரத்திலிருந்து குறித்த குழந்தை மீட்கப்பட்டதாகவும் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெறிவிக்கின்றனர்.
குறித்த பச்சிளம் குழந்தை 1 மாத வயதுடையதாக மதிக்கத்தக்கது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கோண்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



