இலங்கையில் 51 நாட்களின் பின்னர் 2 ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் இன்று அடையாளம்!

#Corona Virus
Keerthi
3 years ago
இலங்கையில் 51 நாட்களின் பின்னர் 2 ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் இன்று அடையாளம்!

இலங்கையில் 51 நாட்களின் பின்னர் நாளொன்றில் மீண்டும் 2 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனாத் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 1,983 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இறுதியாக கடந்த ஜுலை 28ஆம் திகதி நாளொன்றில் 2 ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவாகியிருந்தது. குறித்த நாளில் 940 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், 51 நாட்களின் பின்னர் நாளொன்றில் மீண்டும் 2 ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 2 ஆயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,260 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 31 ஆயிரத்து 36 ஆக உயர்வடைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!