சுவிற்சலாந்தில் 2030க்குள் பச்சைவீட்டு இலக்கு 50 வீதமாக குறைக்கப்படும்.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

வெள்ளிக்கிழமை நேற்று சுவிற்சலாந்து பெடரல் சபைியன் நிருவாக அமைப்பு காலநிலை மாற்றத்தை எதிர்த்து புதிய வரைவு சட்டத்தை உருவாக்க மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அறிவுறுத்தியது.
இந்த சட்டம் 2030 வரையிலான காலத்தை உள்ளடக்கும் புதிய வரைவுவாக இருக்கும் வேளையில் முந்நைய திருத்தத்திற்கு ஒத்த சர்வதேச காலநிலை இலக்கை கொண்டிருக்கும். நாட்டில் பச்சைவீட்டு மாசுபடுத்தலை 2030க்குள் 50வீதமாக குறைத்துவிடுதல் இதன் நோக்கமாகும்.
இதன் அடிப்படை தற்போதைய காபனீரொட்சைட்டு சட்டத்திற்கு அமைவாக இருக்கும் என்று பெடரல் சபை ஒரு வெளி இணைப்பில் நேற்று அறிக்கையில் தெரிவித்தது. ஆனால் வரிகளை தவிர்த்து ஊக்கத்தொகையை கொண்டதாக இருக்கும்.



