தமிழ் கைதிகளை மிரட்டிய அனுராதபுரம் சிறைச்சாலையில் மட்டும் CCTV இல்லை !
#Anuradapura
#Prison
Yuga
3 years ago

தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மிரட்டியதாக கூறப்படுகிற சம்பவம் நிகழ்ந்த அனுராதபுரம் சிறைச்சாலையில் மட்டும் CCTV கமரா பொருத்தப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தகவலை சிறைச்சாலை தலைமையகம் தெரிவிக்கின்றது.
குறிப்பாக அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் களுத்துறை சிறைகளில் மட்டுமே CCTV பொருத்தப்பட்டுள்ளதாகவும் அனுராதபுரம் சிறைச்சாலையில் மட்டும் CCTV கமரா பொருத்தப்பட்டிருக்கவில்லை எனவும் அந்த திணைக்களம் கூறுகிறது.



