சுவிற்சலாந்தில் டெல்டா தொற்றுக்குப்பின் 3 மாதங்களுக்குப்பிறகு தடுப்பூசி ஏற்ற வேண்டும்.
#world_news
#Covid 19
#Switzerland
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சலாந்தில் கடந்த 17ம் திகதி செப்டம்பர் முடிவடைந்தது மட்டும் இதுவரை அங்கு 819566 கொவிட் தொற்றுக்கள் இனம் காணப்பட்டுள்ளன. அன்றைய தினத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக காணப்பட்டது.
FOPH இன் தொற்று நோய்கள் பிரிவி்ன் தலைவர் வேர்ஜினி மஸ்ரே நேற்று வெள்ளிக்கிழமை அதிகளவில் தொற்று பரவக்கூடிய டெல்டா வைரஸ் பரவலால் ஒரு டெல்டா தொற்றிலிருந்து நீங்கள் பெறும் எதிர்ப்பு சக்தியானது இப்போது மற்ற வகைகளை விட குறைவான பாதுகாப்பையே வழங்குகிறது என்றார்.
தற்போதைய தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு பாதுகாப்பு விஞ்ஞான அறிவின் படி கொவிட் தொற்றிலிருந்து மீண்ட மக்கள் இந்த தொற்று வந்த மூன்று மாதங்களுக்குப்பிறகு தமக்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பதாகும்.



