கனடா கொடூர கொலையாளிக்கு பிணை மறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 6 பேர் கொண்ட குடும்பத்தை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு மீண்டும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த 1982ல் விடுமுறையை கழிக்க சென்ற 6 பேர்கள் கொண்ட ஒரு குடும்பத்தையே தற்போது டேவிட் என்னிஸ் என அறியப்படும் நபர் படுகொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் 25 ஆண்டுகளுக்கு பிணை வாய்ப்பு இல்லை எனவும் நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில் பிணையில் விடுவிக்க கோரிக்கை வைத்துள்ள அவருக்கு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது கனடாவின் பிணை வாரியம்.



