சுவிற்சாலந்தில் நேற்று மாலை பேர்ன் நகரில் கொவிட் எதிரப்பு ஆர்ப்பாட்டம்!

#world_news
சுவிற்சாலந்தில் நேற்று மாலை பேர்ன் நகரில் கொவிட் எதிரப்பு ஆர்ப்பாட்டம்!

சுவிஸில் வியாழக்கிழமை மாலை பேர்ன் நகரில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அங்கீகரிக்கப்படாத ஆர்ப்பாட்டம் ஒன்றுநடைபெற்றது.

இதில் பல்லாயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். ஊர்வலம் பான்கோப்பிளஸிலிருந்து பன்டேஷஸின் திசையில் நகர்ந்தது. இதனால் பேர்ன் கன்டோனல் பொலிஸார் பல சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. நகர மையத்தின் போக்குவரத்திற்கும் இது பெரிய இடைஞ்சலாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தின் போது ஆத்திரமூட்டல்கள் மற்றும் குழுக்களிடையே கைகலப்பும் ஏற்பட்டது. பன்டெஸ்பிளாஸில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் கூறினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தவறணைகளை தாக்கியும் கூட்டாட்சி அரண்மனைக்கு அருகில் உள்ள ஒரு தடையையும் உடைக்க முயன்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!