யாழ் மாவட்டத்திலுள்ள தீவுகளின் சிறப்புக்கள்!

#Jaffna
Yuga
3 years ago
 யாழ் மாவட்டத்திலுள்ள  தீவுகளின் சிறப்புக்கள்!

இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே இவையாகும். ஆனால் ஏழாக இருந்து பின்னர் பல தனித்தீவுகளாகப் பிரிந்து பல தீவுகள் காணப்படுகின்றன.1974 இல் கச்சதீவும் மேலும் ஒன்றாக சேர்ந்துவிட்டது.

? வேலணை (லைடன் தீவு)
?புங்குடுதீவு
?நயினாதீவு (மணிபல்லவ தீவு)
?காரைநகர்
?நெடுந்தீவு
?அனலைதீவு
?எழுவைதீவு
என்னும் ஏழு தீவுகளே  அவையாகும் .

இவற்றுள் லைடன் தீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை கடல்வழிச் சாலைகள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன. ஏனைய நான்கு தீவுகளான எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு என்பவற்றுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு. 

இவை தவிர யாழ் குடாநாட்டை அண்டியுள்ள சில மனிதர் வாழாத தீவுகளும், கச்சதீவும் இதற்குள் அடங்குவதில்லை.
முன்னர் ஏழாக இருந்து பின்னர் பல தனித்தீவுகளாகப் பிரிவுபட்டு பல தீவுகள் காணப்படுகின்றன. 
மண்டைதீவும் பிரிவுபட்டே தற்போதும் உள்ளது.

யாழ் தீபகற்பத்தில் காணப்படும் ஏனைய தீவுகள் வருமாறு - 
சிறு தீவு
குருசடித்தீவு 
கண்ணன் தீவு
காரைதீவு (வேலணை)
குறிகட்டுவான்
நடுத்துருட்டி
பாலை தீவு
பாறை தீவு
புளியந்தீவு
தொரட்டப்பிட்டி
காக்காரத்தீவு

தீவுகளில் மக்களின் ஆரம்ப குடியேற்றம், வாழ்வு முறை, ஆட்சி முறைகள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இடத்தின் பெயர்களை வைத்து நோக்குகையில் இலங்கை மீதான தென்னிந்திய கடல் படையெடுப்புகளில் இத்தீவுகளில் படைகளை அல்லது தனைகளை தங்க வைத்திருக்கலாம் என்று தெரிகின்றது. 

மேலும் ஊர்காவற்றுறை போன்ற துறைகளும் முக்கியத்துவம் பெற்று விளங்கின. மேலும், தீவுப்பகுதி மக்களின் உணவு, மொழி போன்ற சில அம்சங்கள் கேரள  மலையாள  மக்களுடன் ஒப்பிடத்தக்கவை. உணவு உடை பண்பாடு  பெரும்பாலும் மலையாளிகளை  நினைவூட்டுகின்றன.

போர்த்துகேயர் (1505–1658), ஒல்லாந்தர் (1656–1796) ஆகியோரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ மதகுருமார்களால் பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள்.

விவசாயம், மீன்பிடி, வியாபாரம் ஆகிய மூன்று துறைகளுமே தீவுகளின் பொருளாதார அடிப்படையாகும். நில வளம், நீர் வளம் விவசாயத்துக்கு அவ்வளவு ஒத்துழைக்காவிடினும் நெல், தோட்ட செய்கை, மற்றும் வியாபாரப் பயிரான புகையிலை செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. 

இத் தீவுகளின் புவியியல் சூழல் மீன்பிடித்தலுக்கு மிகவும் ஏற்புடையதாக உள்ளது. தீவக மக்கள் கொழும்பு, தென்னிந்தியா மற்றும் கடல் கடந்து பிற நாடுகளிலும் வணிகத் தொடர்புகளை பேணியும், வியாபார முனைப்புக்களை உருவாக்கியும் பொருளீட்டுவதில் ஈடுபட்டு வந்தனர்.

தீவுகளிலும் யாழ்ப்பாணத்திலும் உற்பத்தியாகும் பல நுகர்பொருட்களை இவ்வணிகர்களே உலகின் பல பிரதேசங்களில் இன்றும் சந்தைப்படுத்துகின்றார்கள். 

இலங்கையின் வடமாகாணத்துக்கு உள்ளேயும், கிளிநொச்சி மற்றும் வன்னிப்பகுதிகளில் விவசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது அங்கே இடம்பெயர்ந்து குடியேறியோரில் பெரும்பகுதியினர் தீவுப்பகுதிகளைச் சேர்ந்த மக்களேயாவர்.

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பதற்கமைய ஈழப்போர் காலத்தில் தீவுப்பகுதி மக்கள் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர். ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இருந்த வணிக வெளித்தொடர்புகள் இப்புலம் பெயர்வை ஊக்குவித்துள்ளன. பொரும்பாலான புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் சிதறி வாழுகின்றார்கள். வடக்கின் பொருளாதார உள்வருகையில் இவர்கள் கணிசமான செல்வாக்கு செலுத்துகின்றனர்.

யாழ்ப்பாணத்துன் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. யாழ் குடாநாடு போலன்றி தீவுகளில் கல்வி வசதிகள் மிகக்குறைவு, அதன் காரணமாக வாழ்க்கையை வளப்படுத்த பலர் வணிகத்துறையில் ஈடுபட்டனர்.
 
"வணிகத்தை பொறுத்தமட்டில், (இத்தகைய) கல்வி வசதிகள் பெருமளவில் கிடையாத தீவுப்பகுதியினரே பெரும்பாலும் வெளிப் பிரதேசங்களில் வணுக முயற்சிகளை நிறுவினர். இன்றும் இந்நிலைமை தொடர்ந்து நிலவுவதைக் காணலாம். காரைநகர், புங்குடுதீவு, நயினாதீவு முதலிய தீவுகளை சேர்ந்தவர்கள் இத்துறையில் முன்னோடிகளாக இன்றும் நிலைத்துநிற்கின்றனர்.

இத்தீவுகளிலிருந்து இடம் பெயர்ந்தோர் அத்தீவுகளின் சார்பாகவோ, அல்லது அத்தீவுகளில் உள்ள கிராமங்களின் சார்பாகவோ ஊர் ஒன்றியங்களை அமைத்து அத்தீவுகளில் சமூக சேவைகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றார்கள். 

ஆபத்து உதவிகள், வைத்திய உதவிகள், பாடசாலைகள் மீள் கட்டமைப்பு, சனசமூக நிலையங்கள் பராமரிப்பு, தொழில் வள உதவிகள், பொருள் சந்தைப்படுத்தல், ஏற்றுமதி உதவிகள், போக்குவரத்து மேம்படுத்தல், மின்சத்தி வழங்குதல், கணணி கல்வி ஊக்குவிப்பு,  குழந்தைகள்-முதியோர்-நோய்வாய்பட்டோர் பராமரிப்பு, கோயில்கள் பராமரிப்பு மற்றும் விழா எடுத்தல் போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு அங்கிருக்கும் மக்களின் நலனில் அக்கறை காட்டி வருகின்றனர்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!