பிறந்து 6 நாட்களான சிசு கோவிட் தொற்றுக்கு பலி
#Covid 19
#Corona Virus
Prathees
3 years ago

பலங்கொட வைத்தியசாலையில் பிறந்து 6 நாட்களான சிசு கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாங்கொடையில் உள்ள பொம்புவா பகுதியில் வசிக்கும் ஒரு தாய்க்கு கடந்த 5ம் திகதி பிறந்த குறித்த சிசுவுக்கு சுவாசப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த சிசு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த குழந்தைக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



