துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள்
#Death
#Police
Prathees
3 years ago

பொலிஸ் விசேட அதிரடிப்படையில் இணைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புத்தளம்-அனுராதபுரம் வீதியில் 5 வது தூண் பகுதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் குறித்த கான்ஸ்டபிள் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
மினுவாங்கொடஇ உடுகம்பொலவில் வசிக்கும் 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதிகாரியின் தற்கொலைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை மேலும் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



