இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உழைப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

#SriLanka #Bandula Gunawardana #taxes
Yuga
3 years ago
இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக  உழைப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

இலங்கையில் மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது சேவைகளை பராமரிக்க மாதம் ரூ .100,000 க்கு மேல் சம்பாதிக்கும் அனைவருக்கும் 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக சேவைகளை நடத்திச் செல்வதற்கு “சமூக பாதுகாப்பிற்கான பங்களிப்பு” என்ற பெயரில் சாதாரணமாக இலட்சத்திற்கும் மேல் மாத வருமானம் கொண்ட அனைவரிடத்திலும் 5% வரி அறவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.எனினும், ஏராளமான இலங்கையர்கள் தங்கள் குழந்தைகளுக்காக சர்வதேச பாடசாலைகளில் சேர்த்து அதற்காக பணம் செலுத்துகின்றனர்.

அதேபோல், தனியார் மருத்துவமனைகளிலும் பலர் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்கிறார்கள்.

அவர்களும் உரிய வரி செலுத்த வேண்டுமா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!