பிரபல தொழிலதிபர் கொலை: 4 வருடங்களின் பின்னர் மகன் கைது

#Arrest #Police
Prathees
3 years ago
பிரபல தொழிலதிபர் கொலை: 4 வருடங்களின் பின்னர் மகன் கைது

பிரபல தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த தொழிலதிபர் குலாம் ஹுசைன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக அவரது இளைய மகன் சந்தேகத்தின் பேரில் நேற்று சிஐடியால் கைது செய்யப்பட்டார்.

குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்று  நான்கு வருடங்கள் ஆகிறது.

68இ பிரபல தொழிலதிபரான 68 வயதுடைய குலாம் உசேன்கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 09ம்திகதி  காலமானார். அது ஒரு இயற்கை மரணம் என அறிவிக்கப்பட்டது.

எனினும், அவரது மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக  குறித்த சம்பவம் சிஐடியிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது.

அதன்படிஇ அவரது உடல் 2019 இல் மீட்கப்பட்டு மூன்று சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது

மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனைகளின் அடிப்படையில், தொழிலதிபரின் தாடை எலும்பில் வெடிப்பு மற்றும் இடது விலா எலும்பில் வெடிப்பு காணப்பட்டது.அதன்படி, அவரது மரணம்  சக்தியால் நிகழ்ந்தது என்றும் அது ஒரு கொலை என்றும் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நீண்ட விசாரணைக்குப் பிறகு, சிஐடி அவரது கொலை தொடர்பாக தொழிலதிபரின் இளைய மகனை கைது செய்துள்ளது.

சந்தேக நபரின் மகன் சொத்துக்களை பெறும் நோக்கில் கொலை செய்ததாக சிஐடி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!