இலங்கையில் கோவிட் மரணங்கள் 11 ஆயிரத்தை கடந்தது
#Covid 19
#Corona Virus
#Death
Prathees
3 years ago

இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11இ152 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 482இ360 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும்இ தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411இ233 ஆக அதிகரித்துள்ளது.



