ஊரடங்கு சட்டத்தை நீடிப்பு செய்வதால் எவ்வித பயனுமில்லை

போக்குவரத்து கட்டுப்பாடுகள் சரியாக அமுல்படுத்தப்படாவிட்டால் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை நீடிப்பு செய்தும் எவ்வித பயனுமில்லை என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கருத்து வெளியிடுகையில்,
கடந்த வாரத்தில்இபோக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது மிகவும் பலவீனமாக இருந்தது.
தேவையில்லாமல், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை புறக்கணித்து உரிமங்களை வழங்குவதன் மூலம் இதுபோன்ற விஷயங்களை அதிகாரிகள் அனுமதித்தால், மக்கள் விரும்பியபடி பயணம் செய்ய அனுமதித்தால் இந்த ஊரடங்கு உத்தரவால் எந்த பயனும் இல்லை.
குறிப்பாக வீதியோரங்களில் உணவை விற்பனை செய்கின்றனர். அத்தியாவசியமற்ற வகையில் அதிக எண்ணிக்கையில் பயணிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இப்போது உரிமங்கள் உண்மையில் பிரதேச செயலகங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
மேலும், அத்தியாவசிய சேவைகள் என்ற போர்வையில் ஏராளமான மக்கள் தேவையில்லாமல் சாலையில் பயணம் செய்கிறார்கள்.
எனவே,பொலிஸார் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம் என அவர் தெரிவித்தார்.



