விடுதலைப் புலிகள் மீதான தடையைப் பிரித்தானியா நீடித்தது மகிழ்ச்சி: கூறுகிறார் பீரிஸ்
#G. L. Peiris
Yuga
3 years ago

அண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிப்பதற்குப் பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரில் தாம் இணையவழியில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பெறப்பட்ட பாரிய முன்னேற்றம் தொடர்பான உண்மைநிலையை முழுமையாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



