ஹொரணைக்கு மாற்றப்படவுள்ள சிறைச்சாலைகள்! வெலிக்கடை சிறை வளாகத்தில் ஹோட்டல்கள்

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வளாகம் ஹொரணை பிரதேசத்திற்கு மாற்றப்பட்ட பிறகு சிறை வளாகத்தின் 40 ஏக்கரில் சுமார் 35 ஏக்கர் நிலம் முதலீடுகளுக்காக ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோட்டல் அமைக்கும் திட்டத்திற்காக வெலிக்கடை சிறை தலைமையக கட்டிடத்தை ஒதுக்கி வைக்க திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பல முதலீட்டாளர்கள் ஏற்கனவே திட்டத்திற்கு உடன்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்த தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலை வளாகம் ஹொரணை மில்லேவாவில் 200 ஏக்கர் நிலத்திற்கு மாற்றப்படும்.
அதுபோல் புதிய மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை பெண்கள் சிறை மற்றும் வெலிக்கடை தூக்கு மேடை ஆகியவையும் ஹொரணைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
மில்லேவாவில் பெண்கள் சிறை நிறுவப்படும் போது, குழந்தைகளுடன் இருக்கும் பெண் கைதிகளுக்காக குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு மையமும் அமைக்கப்படும் என்று சிறைத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.



