பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது அவசரகாலச் சட்டம்
Prathees
3 years ago

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை 79 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பிரேரணை க்குஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51வாக்குகளும் அளிக்கப்பட்டன.
செப்டம்பர் 31 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அவசரகால விதிமுறைகளுக்கான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் 1ஆம் திகதி வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவிற்கு அமைய, இந்த அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன



