தெற்கு கடலில் கைதான வெளிநாட்டு பிரஜைக்கு கொரோனா
#SriLanka
#Covid 19
#Colombo
Yuga
3 years ago

தெற்கு கடலில் 336 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
வெளிநாட்டு படகில் கொண்டுவரப்பட்ட குறித்த போதைப்பொருளுடன் 4 பாகிஸ்தான் பிரஜைகளும், 3 பலுகிஸ்தான் பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
பொலிஸார், கடற்படை மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 1,370 கிலோமீற்றர் தொலைவில் சர்வதேச கடல் எல்லையில் குறித்த படகு கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.



