ஒக்டோபர் 2 வரை ஊரடங்கை நீடிக்குமாறு கோரிக்கை
#Curfew
#Covid 19
#SriLanka
Prathees
3 years ago

நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை ஒக்டோபர் 2ஆம் திகதி வரை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை இம்மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்தால் 8500 உயிர்களை காப்பாற்றலாம்.
ஒக்டோபர் 2ஆம் திகதி வரை நீடித்தால் 10 ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்று அந்த சங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 13ம் திகதி வரை தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



