கண்டி வைத்தியசாலையின் 5வது மாடியிலிருந்து குதித்த கோவிட் நோயாளி
#Hospital
#Death
#Covid 19
Prathees
3 years ago

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபரொருவர் கண்டி பொது வைத்தியசாலையின் 5வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (04) காலை 5வது மாடியிலிருந்து குதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கீழே குதித்து படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி அலவத்துகொடையில் வசிக்கும் 38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் பல நாட்களாக மருத்துவமனையில் கோவிட் தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது



