கிளிநொச்சி வைத்தியசாலையில் சடலங்களை பேண கொள்கலன் வசதி

கிளிநொச்சி வைத்தியசாலையில் தேங்கும் சடலங்களை பேணுவதற்கான குளிரூட்டல் வசதியை மேற்கொள்வதற்காக கொள்கலன் ஒன்றை மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
இந்த வார ஆரம்பத்தில் மாவட்ட கொவிட் நிலைமைகள் தொடர்பாக நடைபெற்ற மெய்நிகர் வழி கலந்துரையாடலின்போது, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் கோ.றுஷாங்கன் மற்றும் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் வைத்தியாலை நிர்வாகம் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒரு சமயத்தில் 6 - 7 வரையான சடலங்களை பேணுவதற்கான வசதியே காணப்படுகிறது.
தற்போது கோவிட் மரணங்கள் அதிகரிப்பதால் மரணித்தவர்களின் சடலங்க சடலங்களைக் குளிரூட்டிப் பேணுவதற்கு கொள்கலன் ஒன்றை வழங்கி உதவுமாறு சட்ட வைத்திய அதிகாரி தனுஷன் கோரியிருந்தார்.
இதனையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக குறித்த வசதியை மாவட்டச் செயலாளர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.



