சர்வதேச கடற்பரப்பில் ஹெரோயினுடன் வெளிநாட்டவர் 7 பேர் கைது
#Arrest
#SriLanka
Prathees
3 years ago

தெற்கு கடற்பரப்பில் பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌிநாட்டு மீன்பிடி படகு ஒன்றில் குறித்த ஹெரோயின் தொகை எடுத்துச் சென்ற 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்அடிப்படையில் இலங்கை கடற்படையின் உளவுத்துறை மற்றும் இலங்கை கடற்படை கப்பல்கள் இணைந்து கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏழு வெளிநாட்டு சந்தேக நபர்கள் தற்போது இலங்கை கடற்படையினரால் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகு மற்றும் 7 வெளிநாட்டு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.



