கோவிட் நோயாளர்களுக்கு விடுத்த அவசர எச்சரிக்கை
#Corona Virus
Keerthi
3 years ago

கோவிட் டெல்டா தொற்று ஏற்பட்டால் முழுமையான அறிகுறிகள் அல்லது இருதய நோய் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக கொழும்பு தேசிய வதை்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் கோட்டாபய ரணசிங்க தெரிவிக்கின்றார்.
இது மிகவம் பாரதூர நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த வாரத்தில் இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகமானவர்களுக்கு இருதய சத்திர சிகிச்சையை மேற்கொள்ள நேரிட்டதாகவும் டாக்டர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மருத்துவ ஆலோசனைகள் இன்றி, எந்தவித நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளையும் கொரோனா நோயாளர்களுக்கு கொடுக்க வேண்டாமென மருந்தியல் பேராசிரியர் வைத்தியர் பிரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் இதனை குறிப்பிட்டார்.



