யாழ்ப்பாணத்தில் 39 வயது பெண் உட்பட இருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
#Jaffna
#Death
#Corona Virus
#Hospital
Nila
3 years ago

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை மேலும் இருவர் கொரோனா வைரஸ் க்கு பலியாகியுள்ளனர்.
இதனை போதனா வைத்தியசாலைகள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ் கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவரும் அதே பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய மேலும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
அதனையடுத்து யாழ் மாவட்டத்தில் இதுவரையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



