மங்களவின் மறைவு ஈடு செய்ய முடியாதது - மஹிந்த தெரிவிப்பு

#Mangala Samaraweera
Nila
3 years ago
மங்களவின் மறைவு ஈடு செய்ய முடியாதது - மஹிந்த தெரிவிப்பு

ஜனநாயக அரசியலின் இலட்சினையாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு ஈடு செய்ய முடியாதது.

சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு லிபரல்வாதியாகவே இவர் அரசியலில் செயற்பட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நினைவுகளை மீதமாக்கிய  செயற்பாட்டு ரீதியிலான அரசியல்வாதியான  முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறப்பு செய்தியை கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். 

1983 ஆம் ஆண்டு லண்டன் புனித மெட்னஸ் பல்கலைக்கழகத்தில் முதல் பட்டதாரியாக பட்டம் பெற்றதன் பின்னர் இலங்கைக்கு வந்த மங்கள சமரவீர  அரசியலுக்கு முதன் முறையாக வரும் வரை  நெருங்கிய நண்பராகயிருந்தார்.

 1988ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தொகுதி அமைப்பாளராக  தெரிவு செய்யப்பட்ட மங்கள சமரவீர 1989 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாராளுமன்றிற்கு முதன் முறையாக தெரிவானார். உரிமை மற்றும் நீதி ஆகியவற்றை  கோரி போராடிய சமூக ஜனநாயகவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மங்கள சமரவீர அரசியலில் செயற்பட்டார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிப் பெறுவதற்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறக்க முடியாது.

ஜனநாயக அரசியலில் மறக்கமுடியாத இலட்சினையாக செயற்பட்ட முன்னாள் அமை;ச்சர் மங்கள சமரவீரவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!