கணவனுக்கு பாலில் தூக்கமாத்திரை கொடுத்து கொலை செய்த மனைவி

காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு பாலில் தூக்கமாத்திரை கொடுத்து கொலை செய்து விட்டு கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டதாக நாடகம் ஆடிய மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம்இ இரத்தினபுரி- கிரிவெல்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் குறித்த பெண் வழமைபோலவே கடந்த 20ஆம் திகதியன்று வேலைக்குச் சென்றுள்ளார்.
அப்பெண் வேலை செய்துகொண்டிருந்த போதே, மனிதவள முகாமைத்துவ திணைக்களத்துக்கு தொலைபேசி அழைப்பொன்றுவந்துள்ளது.
அது தொடர்பில், அப்பெண்ணுக்கு அறிவித்த திணைக்களம், உடனடியாக வாகனமொன்றையும் ஏற்பாடு செய்து அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது.
வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தனது கணவன் இறந்துகிடந்துள்ளார்.
எனினும், குறித்த பெண் கத்திப்புலம்பி ஊராரை கூப்பிடாமல், தன்னுடைய கணவன் கொரோனாவால் மரணமடைந்துவிட்டார் என அக்கம் பக்கத்தினருக்கு கூறியுள்ளார்.
அதனால், சடலத்தைப் பார்ப்பதற்கு யாரும் வரவில்லை. இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சடலத்தை, பொலிஸார் இரத்தினபுரி வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றால் அவர் மரணிக்கவில்லை என்றும்
செயற்கையான மூச்சுத்திணறல் காரணமாக பெண்ணின் கணவர்உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டது.
அதனையடுத்து, சந்தேகமடைந்த பொலிஸார், குறித்த பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்டனர்.
கடந்த 19ஆம் திகதியன்று படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர், தன்னுடைய கணவனுக்கு ஒரு கிளாஸ் பாலுடன் ஆறு தூக்கமாத்திரைகளையும் கலந்து கொடுத்துள்ளார்.
அதனைக் குடித்த சிறிது நேரத்திலேயே கணவர் நன்றாக உறங்கியுள்ளார்.
உடனடியாக தன்னுடைய காதலனுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த அந்தப் பெண், வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவுடன், கணவன் படுத்திருந்த அறைக்குச் சென்ற இவ்விருவரும், அந்நபரை மூச்சுத் திணறச் செய்து படுகொலை செய்துள்ளனர்.
கணவனின் கால்களை இறுக்கமாக காதலன் பிடித்துக்கொள்ள, மனைவிஇ தனது கணவனின் முகத்தில் தலையணையை வைத்து அமிழ்த்திப்பிடித்து மூச்சு திணறச்செய்துள்ளார்.
அவர் மரணமடைந்துவிட்டார் என தெரிந்துகொண்டதன் பின்னர், காதலன் வந்த வழியிலேயே அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
குறித்த பெண்ணின் காதலன் அந்தப் பெண் பணியாற்றும் ஆடைத்தொழிற்சாலையில், மேற்பார்வையாளராகப் பணியாற்றுகின்றார்.
தன்னுடைய கணவன் தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் கடுமையாக துன்புறுத்துவதாக, அந்த மேற்பார்வையாளரின் கவனத்துக்கு அப்பெண் கொண்டுவந்துள்ளார். அதுவே காதலாக மலர்ந்துள்ளது.
எனினும், அந்தக் காதலுக்கு காதலியின் வீட்டார் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவந்துள்ளனர் என்பது விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
அப்பெண்ணும் மேற்பார்வையாளரும் சேர்ந்து, இரத்தினபுரியில் உள்ள மருந்தகங்களில் ஒவ்வொரு தூக்கமாத்திரையாக ஆறு மாத்திரைகளைக் கொள்வனவு செய்துள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் இரத்தினபுரி நீதவான் நீதிபதி ஜனிதா ரொசானி முன்னிலையில், நேற்று முன்தினம் (21) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, இருவரையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



