2 தடுப்பூசி போட்ட பின்னரும் ஆணும் பெண்ணும் உயிரிழப்பு

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி பெற்ற பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கோவிட் நிமோனியாவின் தீவிரத்தினால் வீட்டில் இறந்துள்ளனர்.
அஹங்கம விஸ்கம் மாவத்தையில் வசிக்கும் 75 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மூன்று குழந்தைகளின் தாய் பக்கவாதத்தால் அவதிப்பட்டு சுமார் 6 ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கும் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சளி அதிகரித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார். அவர் தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை கடந்த 13 ஆம் தேதி பெற்றதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு ஆணும் உயிரிழந்துள்ளார்.
இவர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் சுமார் 15 வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.
அவர் 14 வது நாளில் இரண்டாவது தடுப்பூசி கொரோனா தடுப்பூசியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு தடுப்பூசி பெற்ற நிலையிலும் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்து வருகின்றமை இலங்கை மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றது.
மேலும், இலங்கையில் நேற்றையதினம் 198 கொரோனா உயிரிழப்புக்களை சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் உறுதி செய்திருந்தார்.
அவர்களில் 154 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இதுவரை 7,183 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. அவர்களில் 5,487 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.



