கோவிட் மரணங்கள்: தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை முதலிடத்தில்

இலங்கையில் நாளாந்தம் கோவிட் இறப்பு விகிதத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.
ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு நாளொன்றுக்கு கோவிட் இறப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தற்போது தெற்காசிய பிராந்தியத்தின் முதல் எட்டு நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளது.
கோவிட் இறப்புகள் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 9 ஆக இருப்பதே இதற்குக் காரணம்.
இந்த பட்டியலில் வங்காளதேசம், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன.
மாலைதீவில் கடந்த 19 நாட்களில் கோவிட் மரணம் பதிவாகவில்லை.
கோவிட் பரவலழன் ஆரம்பத்தல் இருந்து பூடானில் மூன்று மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
முன்னதாக, இந்த பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த 10 நாட்களில் தினசரி இறப்புகளின் விரைவான அதிகரிப்புடன், அது முதலிடத்தைப் பிடித்தது.
இதேவேளை, ராகம போதனா மருத்துவமனையின் கோவிட் வார்டு எண் 26 இன் நடைபாதையில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் பல உடல்கள் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



