மாவனெல்ல புத்தர் சிலை விவகாரம்: தகவல் வழங்கிய தஸ்லினுக்கு 25 இலட்சம் ரூபா வெகுமதி
Prathees
3 years ago

மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில்இ காவல்துறைக்கு தகவல் வழங்கியமையால், தாக்குதலுக்கு இலக்கான மொஹமட் ராசிக் மொஹமட் தஸ்லினுக்கு 25 இலட்சம் ரூபா வெகுமதியை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.
தகவல் தெரிவித்தமைக்காக சஹ்ரான் ஹாஷிமின் குழுவால் தாக்கப்பட்டு மொஹமட் தஸ்லின்இ தற்போது விசேட தேவையுடைய நிலையில் உள்ளார்.
இந்த நிலையில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் இந்த வெகுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.



