தோல்வியில் முடிந்த ரணில் - ஜனாதிபதி சந்திப்பு.
Reha
3 years ago

முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியை இன்று நண்பகலில் சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் பேச்சு நடத்தியிருக்கின்றார்.
குறிப்பாக இந்த சந்திப்பில் 21 யோசனைகளை இச்சந்திப்பில் ஜனாதிபதியிடம் முன்வைத்திருக்கின்றார் ரணில்.
அதில் விசேடமாக சர்வ கட்சித்தலைவர்கள் கூட்டமொன்றை நடத்தும்படி முன்வைக்கப்பட்ட யோசனையை ஜனாதிபதி முற்றாக நிராகரித்திருப்பதாக அறியமுடிகின்றது.
இதன் காரணமாக கோவிட் ஒழிப்பு முயற்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு உதவும்படியாக ரணில் விக்கிரமசிங்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது .



