கஞ்சாவுடன் பிரித்தானியப் பிரஜை கைது
Prathees
3 years ago

இலங்கையில் தங்கியிருக்கும் பிரித்தானியப் பிரஜை ஒருவர் கஞ்சாவுடன் ஹிக்கடுவைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிக்கடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு, அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
43 வயதான குறித்த நபரிடம் மேலதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



