இலங்கையில் 4 வருடங்களாக தேங்கியுள்ள சடலங்களை அடக்கம் செய்ய நடவடிக்கை!

Yuga
3 years ago
இலங்கையில்  4 வருடங்களாக தேங்கியுள்ள சடலங்களை அடக்கம் செய்ய நடவடிக்கை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் தேங்கியுள்ள இதுவரை அடையாளம் காணப்படாத 40 சரீரங்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

2017 ஆம் ஆண்டு முதல் குறித்த சரீரங்கள் அடையாளம் காணப்படாது இவ்வாறு தேங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்19 மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதன் காரணமாக வைத்தியசாலைகளின் பிரேத அறையில் தேங்கியுள்ள சரீரங்கள் காரணமாக நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் குறைக்கும் நோக்கில் குறித்த சரீரங்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நேற்றைய நிறைவுறுத்தப்பட்டிருந்தது.

58 சரீரங்கள் மாத்திரமே வைத்திருக்க கூடிய வசதிகள் உள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது 77 சரீரங்கள் தேங்கியுள்ளதாக நேற்று முன்தினம் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அவற்றில் 21 கொவிட்19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சரீரங்களாகும். 77 சரீரங்களில் 40 சரீரங்கள் 2017 ஆம் ஆண்டு முதல் தேங்கியுள்ள நிலையில் அவை, ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படாதவை என மருதானை காவல்துறையினால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவிருந்தமையை அடுத்து குறித்த சரீரங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது.
இதனையடுத்தே குறித்த சடலங்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஓட்டமாவடியில் சடலங்கள் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!